நெய்மணக்க அம்மாவின் முற்றப் பொங்கல்
நினைவினிலே நெகிழ்வையுமே தந்து செல்ல
மெய்மறந்து பழையகாலம் நோக்கிச் சென்றே
மெதுவாயே குடும்பத்தின் விழாவைக் கண்டேன்!
செய்வதேது மறியாத குழந்தை போலே
சிறிதுகண்ணீர சிரிப்பெனவே மகிழ்ச்சி கொண்டேன்!
தொய்தலுடன் உற்சாகம் கொண்டே நானும்
துணிவுடனே ஆயத்தம் செய்தே வைத்தேன்!
புத்தடுப்பில் புதுப்பானை வைத்தே பொங்கல்
புதுப்பொலிவை வரவழைத்து மகிழ்வை ஊட்டும்!
அத்தனைபேர் வாழ்க்கையிலும் ஒளியை ஏற்றும்
அறுவடையைத் தந்திட்ட பரிதி போற்றி!
சத்தமெனப் பட்டாசைக் கொழுத்தி நாமும்
சத்தமிட்டே மகிழ்வாகப் படைப்போம் பொங்கல்!
எத்தனைநாள் காத்திருந்தார் சிறுவர் எல்லாம்!
எழுவாரே கொண்டாடும் ஆர்வம் கொண்டே!
உறவினர்கள் பலகாரம் சேர்ந்து செய்ய
உச்சிவரை வாசமது மூக்கால் செல்லும்!
மறக்காது தேவையான பொருட்கள் தேடி
மறைவின்றி அக்காவும் சேர்த்து வைப்பார்!
உறக்கமின்றி இரவெல்லாம் வேலை செய்வோம்
உற்சாகம் குறையாது பொங்கல் வைப்போம்!
மறக்காது எல்லோரும் வந்தே இங்கு
மகிழ்ச்சியுடன் ஆசிதனை வழங்கிப் போங்கள்!
________________