வீட்டில் வளரும் மாமரமாம்
வேண்டும் அளவு பயன்தருமாம்!
பாட்டன் கையால் நட்டதுவாம்
பாட்டி கதையாய்ச் சொல்வாரே!
வாட்டும் வெயில் நமைக்காக்க
வகையாய் நிழலைத் தந்திடுமே!
கூட்ட மாக இதனடியில்
கூடி நாளும் பேசிடுவோம்!
குறைந்த உயரம் கொண்டதுவே
குறைகள் இல்லாப் நலந்தருமே!
இறைந்து தழைகள் பரவியதால்
இயல்பாய்க் குளிர்மை அளித்திடுமே!
நிறைந்த பூக்கள் பிஞ்சுகளும்
நின்றே கண்கள் பார்க்கையிலே
இறைவன் ஈய்ந்த மகிழ்வாக
இதனை யென்றும் எண்ணிடுவோம்!
திரண்ட வட்ட இதன்காயோ
தின்ன நன்றாய்ப் புளித்திடுமே!
நிறமாய்ப் பழுத்த பழங்களுமே
நினைத்தால் சுவையைத் தந்திடுமே!
சிறந்த மருந்துக் குணம்கொண்ட
சீராம் தருவை வளர்ப்போமே!
அறமே செழிக்கப் பசுமையுற
ஆளுக் கொன்றாய் நடுவோமே!
________________